திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்...!
(புலனத்தில் நான் படித்த கட்டுரை இது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை )
வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான முனைவர்
எசு. பத்மநாபன் திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காகத் தன் வாழ்வையே அளித்தவர்.
அவர் தரும் தகவல்களை பார்ப்போம்...!
கரை கண்டேசுவரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 அயிரமாத்திரி (கி.மீ.) தொலைவிலும்
முட்டம் கடற்கரையில் இருந்து 5 அயிர மாத்திரி தொலைவிலும் உள்ள சிற்றூர்.
அதன் பெயர் #திருநாயனார்க்குறிச்சி.
எளிமையான சிற்றூர்.,
மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருக்கிறது..
கரை கண்டேசுவரர் கோயில் முன்பு உள்ள கிராமத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார்...!
"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்கிறார்...
"வள்ளுவர் இங்குதான் பிறந்தார் என்பதற்குச் சான்றுகள் ஏதாவது இருக்கிறதா? ''
"நிறையச் சான்றுகள் இருந்ததால் தான் மூன்று முதல்வர்களிடமும் இதைப்பற்றி பேசியுள்ளார்..
எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் தனது ஆய்வு குறித்துப் பேசியிருக்கிறார்...
ஐம்பது ஆண்டுகளாகத்
திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவரது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்' என்ற கண்டுபிடிப்புத் தான்.
இதை 1989 திசம்பர் மாதம் மொரீசியசு
தீவில் நடைபெற்ற
ஏழாவது அனைத்துலகத் தமிழ் மாநாட்டில் பேசியுள்ளார்..
பின் அதையே புத்தகமாக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.
மைலாப்பூர் தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு,
வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது....!
சான்றுகளோடு இவர் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை.
அதன் மூலம் திருவள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....
அதன்படி திருவள்ளுவர் வள்ளுவநாட்டை ஆண்ட மன்னர்,
வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள #திருநாயனார்குறிச்சியில் பிறந்து,
#மதுரையில் சில காலம் தங்கிப்
பின்
#மயிலாப்பூர் சென்று மறைந்தார்.
இதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே இருக்கின்றன...
கிட்டத்தட்ட திருக்குறளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்களாக உள்ளன...!
"இன்னைக்கு ஒரே மடியா இருக்கு'' என்பது எளிதான பேச்சு மொழி...!
மடி என்றால் சோம்பல்.
திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை.
இங்கு அது எளிய பேச்சுத் தமிழ்...!
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள்.
குமரி மாவட்டத்தில் மட்டும்தான் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் என அனைத்தையும் வெள்ளம் என்பார்கள்.
இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு ' என்று குறிப்பிடுகிறார்...!
இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம்...!
குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.
மற்ற இடங்களில் இப்படிப் பேசினால் சிரிப்பார்கள்.
குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள்.
இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல் எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்,
பயனிலை அஃறிணையாகக் கூறுவது
இந்த மக்களின் வழக்கம்....!
"அப்பா வரும்'', ''அம்மா பேசும்'', ''மாமா முடிக்கும்'', இப்படி பல....
இதை அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்...!
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்''
இந்தக் குறளில்,
இதனை இவன் முடிப்பவன் என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றதை காணலாம்...!
அதேபோல் உணக்கின் என்ற சொல்லையும்,
ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி உரம் கூடத் தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர்...
"தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்'' என்று குறிப்பிடுகிறார்.
இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற சொல்லைக் குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.
மீன்கள் மினுமினுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு.
முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் சரிகையை இணைத்து
மீன் பிடிப்பதில் வல்லவர்கள்.
இப்படித் தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது...!
வேறு எங்கும் இல்லை.
இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.
இவற்றை விட ஓர் அரிய சான்றினைக் கூறுகிறார்...!
இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று.
'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றிக் கூறுகிறார்.
''பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று'' என்பது அந்தக்குறள்.
வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார்.
பிணம் தழுவுதல் என்ற பழக்கம் பண்டைய கால சேரத் தமிழர்களிடையே இருந்தது.
திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அணுப்புவார்கள்.
அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் பிணத்தைத் தழுவி வரவேண்டும்.
இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள்.
காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆன்மா அமைதியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தைத் தழுவிய இளைஞனையும்,
பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சான்று'' என்கிறார் பத்மநாபன்.
திருநாயனார் குறிச்சியை அடுத்து வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தடிக்காரங்கோணம் அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது.
இது அந்தக் காலத்தில் உதகை, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.
இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள்.
தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள்.
அப்படி அவர் தங்கிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
வள்ளுவன் கல் பொற்றையில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருக்கிறது..
"அதுதான் வள்ளுவன் கல்பொற்றை'' என்கிறார் பத்மநாபன்.
அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.
முனைவர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகக்
கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும்,
அதன்பின் பாரத மாநில வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து
திருவள்ளுவர் இங்கு வருவதற்கான காரணத்தைச் சான்றுகளோடு சொல்கிறார்...!
நன்றி: முனைவர் எசு.பத்மநாபன்.
(புலனத்தில் நான் படித்த கட்டுரை இது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை )
வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான முனைவர்
எசு. பத்மநாபன் திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காகத் தன் வாழ்வையே அளித்தவர்.
அவர் தரும் தகவல்களை பார்ப்போம்...!
கரை கண்டேசுவரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 அயிரமாத்திரி (கி.மீ.) தொலைவிலும்
முட்டம் கடற்கரையில் இருந்து 5 அயிர மாத்திரி தொலைவிலும் உள்ள சிற்றூர்.
அதன் பெயர் #திருநாயனார்க்குறிச்சி.
எளிமையான சிற்றூர்.,
மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருக்கிறது..
கரை கண்டேசுவரர் கோயில் முன்பு உள்ள கிராமத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார்...!
"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்கிறார்...
"வள்ளுவர் இங்குதான் பிறந்தார் என்பதற்குச் சான்றுகள் ஏதாவது இருக்கிறதா? ''
"நிறையச் சான்றுகள் இருந்ததால் தான் மூன்று முதல்வர்களிடமும் இதைப்பற்றி பேசியுள்ளார்..
எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் தனது ஆய்வு குறித்துப் பேசியிருக்கிறார்...
ஐம்பது ஆண்டுகளாகத்
திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவரது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்' என்ற கண்டுபிடிப்புத் தான்.
இதை 1989 திசம்பர் மாதம் மொரீசியசு
தீவில் நடைபெற்ற
ஏழாவது அனைத்துலகத் தமிழ் மாநாட்டில் பேசியுள்ளார்..
பின் அதையே புத்தகமாக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.
மைலாப்பூர் தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு,
வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது....!
சான்றுகளோடு இவர் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை.
அதன் மூலம் திருவள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....
அதன்படி திருவள்ளுவர் வள்ளுவநாட்டை ஆண்ட மன்னர்,
வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள #திருநாயனார்குறிச்சியில் பிறந்து,
#மதுரையில் சில காலம் தங்கிப்
பின்
#மயிலாப்பூர் சென்று மறைந்தார்.
இதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே இருக்கின்றன...
கிட்டத்தட்ட திருக்குறளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்களாக உள்ளன...!
"இன்னைக்கு ஒரே மடியா இருக்கு'' என்பது எளிதான பேச்சு மொழி...!
மடி என்றால் சோம்பல்.
திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை.
இங்கு அது எளிய பேச்சுத் தமிழ்...!
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள்.
குமரி மாவட்டத்தில் மட்டும்தான் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் என அனைத்தையும் வெள்ளம் என்பார்கள்.
இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு ' என்று குறிப்பிடுகிறார்...!
இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம்...!
குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.
மற்ற இடங்களில் இப்படிப் பேசினால் சிரிப்பார்கள்.
குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள்.
இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல் எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்,
பயனிலை அஃறிணையாகக் கூறுவது
இந்த மக்களின் வழக்கம்....!
"அப்பா வரும்'', ''அம்மா பேசும்'', ''மாமா முடிக்கும்'', இப்படி பல....
இதை அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்...!
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்''
இந்தக் குறளில்,
இதனை இவன் முடிப்பவன் என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றதை காணலாம்...!
அதேபோல் உணக்கின் என்ற சொல்லையும்,
ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி உரம் கூடத் தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர்...
"தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்'' என்று குறிப்பிடுகிறார்.
இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற சொல்லைக் குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.
மீன்கள் மினுமினுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு.
முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் சரிகையை இணைத்து
மீன் பிடிப்பதில் வல்லவர்கள்.
இப்படித் தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது...!
வேறு எங்கும் இல்லை.
இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.
இவற்றை விட ஓர் அரிய சான்றினைக் கூறுகிறார்...!
இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று.
'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றிக் கூறுகிறார்.
''பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று'' என்பது அந்தக்குறள்.
வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார்.
பிணம் தழுவுதல் என்ற பழக்கம் பண்டைய கால சேரத் தமிழர்களிடையே இருந்தது.
திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அணுப்புவார்கள்.
அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் பிணத்தைத் தழுவி வரவேண்டும்.
இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள்.
காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆன்மா அமைதியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தைத் தழுவிய இளைஞனையும்,
பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சான்று'' என்கிறார் பத்மநாபன்.
திருநாயனார் குறிச்சியை அடுத்து வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தடிக்காரங்கோணம் அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது.
இது அந்தக் காலத்தில் உதகை, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.
இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள்.
தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள்.
அப்படி அவர் தங்கிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
வள்ளுவன் கல் பொற்றையில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருக்கிறது..
"அதுதான் வள்ளுவன் கல்பொற்றை'' என்கிறார் பத்மநாபன்.
அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.
முனைவர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகக்
கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும்,
அதன்பின் பாரத மாநில வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து
திருவள்ளுவர் இங்கு வருவதற்கான காரணத்தைச் சான்றுகளோடு சொல்கிறார்...!
நன்றி: முனைவர் எசு.பத்மநாபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக