பழைய சென்னையை கண்டுகளியுங்கள். வாகன நெரிசலால் நாம் படும் பாட்டை நினைக்கும் போது இந்த படங்கள் நமக்கு அழகாக தெரிகிறது. ஒரு ஏக்கத்தோடே இதை பார்க்கிறோம்..






மின்சார கம்பியை தரையில் பதிக்கிறோம் என்று ரோடை உடைத்தார்கள். போக்குவரத்து நெரிசலை பொறுத்துக்கொண்டோம். பாதாளசாக்கடை போடுவதாக சொல்லி பள்ளம் நோண்டினார்கள். நடப்பதற்கே சிரமமாயிற்று. பொறுத்துக்கொண்டோம். டெலிபோன் கேபிளை பதிக்க, பாலம் கட்ட, குடிநீர் பைப் போட என்று ஒவ்வொரு விஷயத்திற்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய சிரமம் நாளைய நன்மைக்கே என்று நமக்கு நாம் சமாதானம் கூறிக்கொண்டோம். ஆனால் இது ஒரு தொடர்கதையாக வந்துகொண்டே இருப்பதுதான் பெரிய தலை வலி. எவ்வளவுதான் பாலம் கட்டினாலும் நெரிசல் கூடவே செய்கிறது. டெலிபோன் கேபிள் போடும் போது, இது நமது நன்மைக்கு என்று சிரமத்தை பொறுத்தோம். ஆனால் தொழில்நுட்பம் மாறியதால் இப்பொழுது எவரும் லேன்ட்லைனை பயன்படுத்துவது இல்லை. மொபைலுக்கு மாறிவிட்டோம். அப்படி என்றால் கேபிள் போடும் போது இது நமது நன்மைக்கே என்று சமாதானம் கூறியது வீண்தானே.
இப்படியெல்லாம் ஒரு ஊரையே குத்தி குதறுவதற்கு பதில் வேலைவாய்ப்பை எல்லா மண்டலங்களிலும் ஏற்படுத்தினால் சென்னையின் மக்கள்தொகை குறையும். போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இந்த ஊரின் அழகையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கலாம். காற்று மாசுபடுவதையும் குறைக்கலாம். முக்கியமாக தமிழ்நாடு முழுவதுமே போக்குவரத்தை குறைக்க முடியும். பெரும்பாலான மக்கள் அவர்களின் ஊருக்கு அருகில் வேலை செய்யும் நிலை வரும் பொது இது சாத்தியமே. இதனால் விபத்துகளும் குறையும்.
சென்னையை தவிர கோவை, திருச்சி, நெல்லை, தஞ்சை போன்ற ஊர்களில் தொழில்களை பெருக்குவதுதான் சென்னையை நிம்மதியான ஊராக வைக்க தேவையான வழி. ஆனால் இந்த வழியினால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதிகளுக்கு லாபம் கிடைக்காது. அதனால் பழைய சென்னையை பார்க்க நினைப்பது கனவாகவே .இருக்கும் என்றே மனம் அடித்து சொல்கிறது.
மின்சார கம்பியை தரையில் பதிக்கிறோம் என்று ரோடை உடைத்தார்கள். போக்குவரத்து நெரிசலை பொறுத்துக்கொண்டோம். பாதாளசாக்கடை போடுவதாக சொல்லி பள்ளம் நோண்டினார்கள். நடப்பதற்கே சிரமமாயிற்று. பொறுத்துக்கொண்டோம். டெலிபோன் கேபிளை பதிக்க, பாலம் கட்ட, குடிநீர் பைப் போட என்று ஒவ்வொரு விஷயத்திற்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய சிரமம் நாளைய நன்மைக்கே என்று நமக்கு நாம் சமாதானம் கூறிக்கொண்டோம். ஆனால் இது ஒரு தொடர்கதையாக வந்துகொண்டே இருப்பதுதான் பெரிய தலை வலி. எவ்வளவுதான் பாலம் கட்டினாலும் நெரிசல் கூடவே செய்கிறது. டெலிபோன் கேபிள் போடும் போது, இது நமது நன்மைக்கு என்று சிரமத்தை பொறுத்தோம். ஆனால் தொழில்நுட்பம் மாறியதால் இப்பொழுது எவரும் லேன்ட்லைனை பயன்படுத்துவது இல்லை. மொபைலுக்கு மாறிவிட்டோம். அப்படி என்றால் கேபிள் போடும் போது இது நமது நன்மைக்கே என்று சமாதானம் கூறியது வீண்தானே.
இப்படியெல்லாம் ஒரு ஊரையே குத்தி குதறுவதற்கு பதில் வேலைவாய்ப்பை எல்லா மண்டலங்களிலும் ஏற்படுத்தினால் சென்னையின் மக்கள்தொகை குறையும். போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இந்த ஊரின் அழகையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கலாம். காற்று மாசுபடுவதையும் குறைக்கலாம். முக்கியமாக தமிழ்நாடு முழுவதுமே போக்குவரத்தை குறைக்க முடியும். பெரும்பாலான மக்கள் அவர்களின் ஊருக்கு அருகில் வேலை செய்யும் நிலை வரும் பொது இது சாத்தியமே. இதனால் விபத்துகளும் குறையும்.
சென்னையை தவிர கோவை, திருச்சி, நெல்லை, தஞ்சை போன்ற ஊர்களில் தொழில்களை பெருக்குவதுதான் சென்னையை நிம்மதியான ஊராக வைக்க தேவையான வழி. ஆனால் இந்த வழியினால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதிகளுக்கு லாபம் கிடைக்காது. அதனால் பழைய சென்னையை பார்க்க நினைப்பது கனவாகவே .இருக்கும் என்றே மனம் அடித்து சொல்கிறது.