சனி, 6 நவம்பர், 2021

மாட்டேன்

 என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்

எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்!

வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்!

வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!

இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக