புதன், 17 அக்டோபர், 2012

விடுகதை

        முன்னொரு காலத்தில்  நல்லூர் என்ற  நாட்டை இனியன் என்ற ஒரு அறிவாளி மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம் அவன் எதிரி நாட்டு மன்னனால் போரில் தோற்கடிக்கப்பட்டு  சிறைபிடிக்கப்பட்டான். இனியனது அறிவு கூர்மையை கேள்விபட்ட எதிரி நாட்டு  மன்னன், சிறைக்கு சென்று இனியனை  அழைத்து மன்னா உன்னை  பற்றி கேள்விபட்டேன். அறிவாளியான நீ தப்பிசெல்ல ஒரு வாய்ப்பு  தருகிறேன்.

       நீ இருக்கும்  சிறையில் இரு வாயில்கள் உள்ளன. ஒரு வாயில் வாழ்வின் வாயில். அதன் வழி சென்றால் கண்டிப்பாக தப்பிக்கலாம். மற்றொரு வாயில் மரணத்தின் வாயில். அதில் சென்றால் மரணம் நிச்சயம். ஒவ்வொரு வாயிலிலும் ஒரு காவலாளி நிற்கிறார். ஒருவர் உண்மையை மட்டும் பேசுபவர் மற்றொருவர் பொய் மட்டும் பேசுபவர்.

         நீ ஒரே ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டு வாழ்வின் வாயிலை  அறிந்துகொள் என்று கூறினான். இனியனுக்கு எந்த காவலாளி உண்மை பேசுபவர் என்று தெரியாது. பல மணி நேரம் சிந்தித்து ஒரு கேள்வியை தயார்செய்தான். அந்த கேள்வியை ஒரு காவலாளியிடம் கேட்டு வாழ்வின் வழியை அறிந்து கொண்டு அதன் வழி தப்பித்து சென்றான். (இந்த கேள்வியை எந்த காவலாளியிடம் கேட்டாலும் வாழ்வின் வாயிலை அறிந்து கொள்ளலாம்)

   அப்படியானால் அந்த கேள்வி என்ன?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக